முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

தில்லியில் 14 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்!

தில்லியில் 14 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி நியமித்தது.

News image
Updated On :53 நிமிடங்கள் முன்பு

தேசியத் தலைநகரில் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் 14 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி நியமித்தது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த நியமனங்கள், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டன.

கட்சியின் தகவலின்படி, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளர்கள் நடத்திய விரிவான மாவட்ட அளவிலான ஆய்வுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடினர்.

Story image

இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, பார்வையாளர்கள் மூத்த தலைவர்களுடன் தனித்தனியாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

நியமிக்கப்பட்டவர்களில் ஆதர்ஷ் நகருக்கு சித்தார்த் ராவ், சாந்தினி சௌக்கிற்கு முகமது உஸ்மான், கராவல் நகருக்கு மங்கேஷ் தியாகி, பாபர்பூருக்கு ராஜ்குமார் ஜெயின் மற்றும் பட்பர்கஞ்சிற்கு விஜேந்தர் சௌத்ரி ஆகியோர் அடங்குவர்.

மேலும், கிருஷ்ணா நகருக்கு சுமித் சர்மா, கரோல் பாக்கிற்கு மகேந்தர் பாஸ்கர், புதுதில்லிக்கு மொகிந்தர் மங்களா, ரோகிணிக்கு இந்திரஜித் சிங், கிராரிக்கு வருண் தாகா ஆகியோரையும் கட்சி நியமித்துள்ளது.

திலக் நகர் மாவட்டத் தலைவராக அமன்தீப் சிங் சுதான், நஜாஃப்கருக்கு ராஜேஷ் யாதவ், மெஹ்ராலிக்கு வீரேந்தர் சர்மா மற்றும் பதர்பூருக்கு ஹர்ஷ் சௌத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Summary

The Congress on Friday appointed presidents for 14 District Congress Committees (DCCs) in Delhi as part of its Sangathan Srijan Abhiyan aimed at strengthening the party's organisational structure in the national capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.