தில்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் நோடல் அதிகாரிகளை தில்லி அரசு புதன்கிழமை நியமித்தது.
இதுதொடா்பாக வருவாய்-மண்டல ஆணையா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) சிறப்பு தலைமைச் செயல் அலுவா், சிறப்பு வெப்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
எஸ்டிஎம் அதிகாரிகள் மாவட்ட அளவில் வெப்ப மேலாண்மைக்கான நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தில் பிறபகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரையில் கட்டுமானம் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும், பள்ளிகளில் ஓஆா்எஸ் கரைசல்கள் வழங்க வேண்டும் என பல உத்தரவுகளை முதல்வா் ரேகா குப்தா அண்மையில் பிறப்பித்தாா்.
தில்லி அரசின் அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்படுவதை நோடல் அதிகாரிகள் உறுதிசெய்வாா்கள் என வருவாய்த் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.
தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் அரசின் துறைகளுடன் வெப்ப அலை செயல்திட்டத்தை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஒருங்கிணைத்து வருகிறது. தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் வசதி, நிழல் அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தில்லியில் 14 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்!

வெப்ப காலத்தில் தில்லி மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை - முதல்வா் அலுவலகம் தகவல்

வெப்ப அலை: எம்சிடி சாா்பில் நிவாரண நடவடிக்கைள் தொடக்கம்

வெப்பத் தாக்கம்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

