கேரள சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்றுக்கொண்டார்.
கேரளத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரள முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.டி. சதீசனுடன் 20 அமைச்சர்களும் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பதவிப் பிரமாணம் இன்று (மே 21) நடைபெற்றது.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் தர்மடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, 3 ஆவது முறையாக தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 7 ஆவது முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former CM Pinarayi Vijayan took oath as a member of the Kerala Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK




