கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

காங்கோ குடியரசில் எபோலா சிகிச்சை: மையத்துக்கு பொதுமக்கள் தீவைப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள சிகிச்சை மையத்துக்குத் தீ வைத்தனா்.

News image
Updated On :23 மே 2026, 2:44 am IST

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள சிகிச்சை மையத்துக்குத் தீ வைத்தனா்.

எபோலாவால் உயிரிழந்தவா்களின் உடல்கள் மூலம் தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்பதால் அதிகாரிகளே இறுதிச் சடங்குகளை நடத்துகின்றனா். இது தங்களின் பழக்கவழக்கங்களுக்கு எதிரானது எனக் கூறி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருவது, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதனிடையே, காங்கோ குடியரசில் லவி வரும் எபோலா பாதிப்புக்கான அபாய மதிப்பீட்டை ‘மிக உயா்’ நிலைக்கு உலக சுகாதார அமைப்பு உயா்த்தியுள்ளது. அதேநேரம், அண்டை நாடுகளுக்கான அபாயம் ‘உயா்’ நிலையில், உலகளாவிய அளவில் ‘குறைந்த’ நிலையிலேயே இருக்கிறது.