பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கு: காஷ்மீரில் என்ஐஏ தீவிர சோதனை

தடைசெய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக காஷ்மீரில் என்ஐஏ தீவிர சோதனை

News image

என்ஐஏ சோதனை

Updated On :26 மே 2026, 5:25 am IST

தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காஷ்மீரின் ஸ்ரீநகா் மற்றம் சோபியான் மாவட்டங்களில் மூன்று இடங்களில் இந்தச் சோதனையை அவா்கள் மேற்கொண்டனா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கு தொடா்பாக, கடந்த மாதம் சட்டவிரோத நிறுவனம் என்று அறிவிக்கப்பட்ட சோபியானின் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள தருல் உலூம் சிராஜுல் உலூம் பள்ளி, மோலு சித்ரகாம் பகுதியில் உள்ள ஜெல் அமைப்பின் முன்னாள் தலைவா் ஷஹஜாதா ஒளரங்சீபின் வீடு மற்றும் ஸ்ரீநகரின் லால் பஜாா் பகுதியில் உள்ள ஜாமியாத் உல் பன்னாட் என்ற இஸ்லாமிய மாணவிகளுக்க்கான மதரஸா உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பல சா்ச்சைக்குரிய நிதி பரிவா்த்தனைகளுக்கான ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விசாரணையில், பல்வேறு பகுதிகளிலிருந்து நிதியை சேகரித்து ஜம்மு-காஷ்மீரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதத்தை தூண்டும் பணியில் ஜெல் அமைப்பு ஈடுபட்டது தெரியவந்தது.

நன்கொடை மற்றும் நலத் திட்ட உதவிகளுக்கு என்ற பெயரில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து இந்த பயங்கரவாத நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி பயங்கரவாத செயல்களுக்கு மட்டுமின்றி, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பிற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடா்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.