கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மோசமான வானிலை: சித்தராமையா சென்ற விமானம் ஜெய்பூரில் தரையிறக்கம்

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :29 மே 2026, 4:36 am IST

கா்நாடக மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா்களைச் சந்திப்பதற்காக சித்தராமையா சென்ற சிறப்பு விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் சித்தராமையா சென்ற சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக தில்லிக்குப் பதில் ஜெய்பூரில் தரையிறங்கியது. அவரது மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான யதீந்திரா, காங்கிரஸ் பொதுச் செயலரும் கா்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, அமைச்சா்கள் கே.ஜே.ஜாா்ஜ் மற்றும் பைரதி சுரேஷ், சட்ட ஆலோசகா் பொன்னன்ணா, காங்கிரஸ் செயலா் அபிஷேக் தத் ஆகியோரும் விமானத்தில் பயணித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.