வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசின் சட்டப்பேரவைக் கூட்டம், திருவனந்தபுரத்தில், தொடங்கியது. இதில், மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நேற்று (மே 29) பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்தி மட்டுமே இசைக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து வினோய் விஸ்வம் பேசியதாவது:
வந்தே மாதரம் ஒரு தேசிய கீதம் அல்ல. சுதந்திர இந்தியாவில் அது ஒருபோதும் தேசிய கீதமாகக் கருதப்படவில்லை. குறிப்பிட்ட சில சூழல்களில் விரும்பினால், முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம் என்ற ஒரு உடன்பாடு இருந்தது.
அதுவும் கட்டாயமில்லை; அது விருப்பத்துக்குரியது. முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடலாம். மூன்றாவது பத்தியிலிருந்து, அது ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுள்களையும் பெண் தெய்வங்களையும் குறிப்பிடத் தொடங்குகிறது.
அதனால்தான், சுதந்திரத்துக்கு முந்தைய நாள்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப்படுவதை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கியது எனத் தெரிவித்தார்.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளும் இடம்பெற வேண்டும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Vinoy Viswam, the Kerala State Secretary of the Communist Party of India (CPI), stated on Saturday that 'Vande Mataram' is not the national anthem.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள பேரவையில் ‘வந்தே மாதரம்’ முழுமையாக இசைக்கப்படவில்லை: ஆளுநரை அவமதித்துவிட்டதாக பாஜக புகாா்
‘வந்தே மாதரம்’ ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரல்! பினராயி விஜயன்

மேற்கு வங்கம்: மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம் : எதிா்க்கட்சிகள் கண்டனம்







