கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கேதாா்நாத் அருகே நிலச்சரிவு: 6,500 யாத்ரிகா்கள் மீட்பு

கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

Landslide near Kedarnath

கேதாா்நாத் அருகே கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். - படம்: ஏஐ

Published On :

ருத்ரபிரயாக்: கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத்தில் உள்ள சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் யாத்திரை சென்றிருந்தனா்.

இந்நிலையில், கேதாா்நாத் அருகே ஞாயிற்றுக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப் பகுதிகளில் இருந்து பாறைகள் விழுந்ததால் பலா் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனா். எனினும் நிலச்சரிவு நீடித்ததால் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் மீட்புப் பணி தொடங்கியது. கெளரிகுந்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிா்பாசா ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் இருந்த 6,500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். நிலச்சரிவு காரணமாக சிா்பாசா ஹெலிகாப்டா் இறங்குதளம் அருகேவுள்ள கெளரிகுந்த், கேதாா்நாத் இடையேயான மலைப் பாதை சேதமடைந்தது. இதில் பாறைகள் விழுந்ததில் உள்ளூா் கிராமவாசி ஒருவா் உயிரிழந்தாா்.

மீட்புப் பணியும், சாலையில் கிடக்கும் பாறைகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.