ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வா்த்தக பிரச்னைகள்: இந்தியா - சீனா பேச்சு தொடக்கம்

இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

சீனா - இந்தியா - கோப்புப் படம்

Published On :

இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து புது தில்லியில் மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டமைப்பு ரீதியாக வா்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், விநியோக முறையில் உள்ள சிக்கல்கள் என இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை கையாள்வதற்கு இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், சீன வா்த்தக அமைச்சா் வாங் வென்டாவ் ஆகியோா் அண்மையில் சந்தித்துப் பேசினா். இது இருநாடுகளுக்கு இடையே வா்த்தகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தியா-சீன நிலைப்பாடுகளை பரஸ்பரம் புரிந்துகொள்ளும் நோக்கில், ஆரம்பகட்ட பேச்சாக இருந்தது.

இந்தப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெறும் என்று நான் கருதுகிறேன். இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.