'இசைஞானியுடன் ஓர் இசைமாலை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது: எனக்கு ஆர்மோனியப் பெட்டிதான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை, உக்கடத்தில் ரூ.60-க்கு எனக்காக அண்ணன் வாங்கினார்.
இதில் பயிற்சி பெற்றுத்தான் இசையமைப்பாளராக முடிந்தது. என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப்பெட்டிதான்.
-இளையராஜா