முத்தமிழில் இயல் மற்றும் நாடகத் தமிழுக்கு புத்தகங்கள் உள்ளன. ஆனால், இசைக்கு மட்டும் புத்தகம் இல்லை. நீங்கள் இசை குறித்து நூல் எழுதலாமே..? கல்லூரி விழா ஒன்றில் மாணவி எழுப்பிய கேள்வி இது.
இசைக்காக சில நூல்கள் இருந்தன. பின்னர் அவை அழிந்துவிட்டன. என்னென்ன நூல்கள் எல்லாம் இசைக்காக இருந்தன என்ற விளக்கத்தை 'உளியின் ஓசை' என்ற படத்தில் கூறியிருக்கிறேன்.
இசை குறித்து என்னோடு அமர்ந்து பேசும் அளவுக்கு திறமையான ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. இதனால், என்னை கர்வம் கொண்டவன் என அழைக்கிறார்கள். சிலர் பிரிந்து செல்கிறார்கள். இசைக்காக நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இதுவரை எனக்கு எழுந்ததில்லை. புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது."
- இளையராஜா