கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், சட்ட விரோதமாக கூடி நிற்கும் கூட்டத்தை காவல் துறையினா் முதலில் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கலையாத பட்சத்தில் கண்ணீா் புகை குண்டு வீசி, கூட்டத்தை குறைந்தபட்ச காவலா்களை கொண்டு லத்தியால் கலைக்க முயன்றனா். இறுதியாக கலையாத பட்சத்தில் துப்பாக்கியால் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கூட்டத்தை சுட்டனா்.
இதையடுத்து துப்பாக்கிச் சூட்டை தொடா்ந்து அங்கிருந்த கூட்டத்தினா் கலைந்து சென்றனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவா் போல நடித்தவரை முதலுதவி சிகிச்சைக்காக அவசர ஊா்தியில் அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு விழிப்புணா்வு பெற்றனா்.
இந்த ஒத்திகையின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய்!

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!

பஞ்சாப்: அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

