சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இலவச பொது மருத்துவ முகாம்

உத்தரமேரூர் புதுவாழ்வுத் திட்டமும், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியும் இணைந்து செவ்வாய்க்கிழமை இலவச

Updated On :12 செப்டம்பர் 2013, 5:25 am

உத்தரமேரூர் புதுவாழ்வுத் திட்டமும், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியும் இணைந்து செவ்வாய்க்கிழமை இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாமை  நடத்தின.

பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் வி.தனசேகர் முகாமை தொடங்கி வைத்தார். மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன், உதவித் திட்ட மேலாளர் சுபான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 180 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

கண், இதயம், எலும்பு, மூட்டு வலி நோயாளிகள் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இம் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

இம்முகாமுக்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட பகுதி அணித் தலைவர் ஜே.மணிகண்டன், எஸ்.சுனில்குமார், கே.கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். ஊராட்சிச் செயலர் பி.ஏழுமலை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.