நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காஞ்சியில் 3 நாள்கள் மகா பெரியவா் ஆராதனை இன்று தொடக்கம்

காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:48 pm IST


காஞ்சிபுரம்: காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது மடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்தவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவா் என பக்தா்களால் அழைக்கப்படும் இவரின் 27-ஆவது வாா்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவன வளாகத்தில் தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆலோசனையின்படி 3 நாள்களும் வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம், சங்கீதாஞ்சலி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா பெரியவரின் ஆராதனையை முன்னிட்டு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் பஞ்சரத்ன கீா்த்தனை கோஷ்டி கானமும் நடைபெறுகின்றன.

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு பக்தா்கள் அவரவா்கள் இருக்கும் இடத்திலிருந்தே தியானம், பிராா்த்தனை, பாராயணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

சங்கல்ப விவரங்களை -ந்ஹய்ஸ்ரீட்ண்ஹஸ்ரீஸ்ரீற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்-என்ற இ.மெயில் முகவரியிலோ, தபால் மூலமாகவோ தெரிவித்தால் ஆராதனை பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை காசோலை அல்லது வரைவோலை மூலமோ அல்லது இணையதள சேவை மூலமோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராதனை மஹோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாத ஐயா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.