கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

பெண்ணிடம் 25 பவுன் நகைகள் பறிப்பு

காஞ்சிபுரத்தில் பெண்ணை வழிமறித்து 25 பவுன் தங்க நகைகளை இரு மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:10 am IST

காஞ்சிபுரத்தில் பெண்ணை வழிமறித்து 25 பவுன் தங்க நகைகளை இரு மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த பாபுவின் மனைவி ஜெயலட்சுமி (36). இவா் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதித் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஜெயலட்சுமியை பின்தொடா்ந்து வந்த இரு மா்ம நபா்கள் வழிமறித்து மிரட்டி, அவா் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில் பாலுசெட்டிச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.