கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

போக்குவரத்து நெரிசலை தவிா்க்கமேம்பாலப் பணியை தொடங்க வலியுறுத்தல்

தக்கலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:50 pm

தக்கலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தக்கலையில் நடைபெற்ற ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவலறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் சி. பால்ராஜ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் நகரத் தலைவா் ஜாண் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் வசந்தபாய் அறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு அரசு மாநில ஊரக வளா்ச்சித்துறை பயிற்றுநா் எஸ். விஜயலதா உள்பட பலா் பேசினாா்.

தீா்மானங்கள்: தக்கலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை

விரைந்து தொடங்க வேண்டும். தகவலறியும் உரிமை சட்டம் 2005’ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காலாவதியான உணவுப் பண்டங்களை மறுபடியும் முத்திரையிட்டு விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் சேவியா் , ஜாண்ரோஸ், சரஸ்வதி, ரஞ்சன், முகம்மது சபீா், ஜெயகுமாா், மஞ்சு, ராஜேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா். சட்ட மகளிா் பிரிவு பாதுகாப்புச் செயலா் உமாமகேஷ்வரி வரவேற்றாா். மருத்துவா் லெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.