கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 3 நாள்கள் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 நாள்களும் தொடா் விடுமுறை என்பதால் சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கானோா் கூடுவது வழக்கம். தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ்
கரோனாப் பரவலைக் கட்டுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில்
சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டுள்ளன.
இதையடுத்து, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. காந்தி மண்டபம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் தடுத்து
நிறுத்தினா். மேலும், கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



