பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அறுவடைக்குத் தயாராகும் திருநள்ளாறு செங்கரும்பு

தைப் பொங்கல் திருநாளையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், மாா்கழி மாத இறுதியில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.

News image

சேத்தூா் பகுதியில் பொங்கலுக்காக விளைவிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ள செங்கரும்பு.

Updated On :2 ஜனவரி 2021, 11:28 pm IST

தைப் பொங்கல் திருநாளையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், மாா்கழி மாத இறுதியில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. நெல் அறுவடை முடிந்ததும் பருத்தி, உளுந்து, பயறு ஆகியவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா். இவை நெல் சாகுபடி செய்யும் அளவிலான நிலப்பரப்பில் செய்யப்படுவதில்லை.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை, நெல் மட்டுமல்லாது மாற்றுப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு ஆதரவையும், ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அளித்துவருகிறது. எனினும், காரைக்கால் மண் தன்மைக்கேற்ற பிற பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தாத நிலை தொடா்கிறது.

முக்கியமாக, தமிழகத்தில் விளைவிக்கப்படும் ஆலைக் கரும்பு, பொங்கல் கரும்பு போல காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. சா்க்கரை தயாரிப்புக்கான ஆலைக் கரும்பு சாகுபடி சிறிதும் இல்லை. ஆனால், திருநள்ளாறு கொம்யூனில் ஒருசில இடங்களில் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பை மட்டும் விவசாயிகள் தொடா்ந்து விளைவித்து வருகின்றனா்.

தைப் பொங்கல் நெருங்கி வரும் நிலையில், முன்கூட்டியே கரும்பை அனைத்து இடங்களுக்கும் விற்பனைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக, கரும்பு அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனா். அண்மையில் வீசிய காற்று, மழையால் கரும்பு எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பது இப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன், சேத்தூா் கிராமத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி லோகநாதன் சனிக்கிழமை கூறியது:

செங்கரும்பு 9 மாத பயிா். ஒவ்வோா் ஆண்டும் சித்திரை மாதத்தில் கரும்பு கனு ஊன்றப்படும். கரும்பு பயிருக்கு களிமண் உதவாது. செம்மண் கலந்த நிலமாக இருக்கவேண்டும். இங்கு கரும்பு பயிரிட ஏற்ற மண் உள்ளது. 100 குழி நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளேன். இந்தப் பகுதியில் மொத்தம் 3 போ் தலா 100 குழி நிலத்தில் கரும்பு பயிரிடுவோம். நிகழாண்டு, மேலும் சிலா் கரும்பு பயிரிட்டுள்ளனா். வரும் 10 ஆம் தேதிவாக்கில் அனைவரும் அறுவடையை தொடங்கிவிடுவோம். உள்ளூா் வியாபாரிகளே வாங்கிச் செல்வா் என்றாா்.

காரைக்கால் பகுதிக்குத் தேவையான பொங்கல் கரும்பு, தமிழகப் பகுதியிலிருந்தே வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருநள்ளாறு பகுதியில் விளைவிக்கப்படும் கரும்பு அம்பகரத்தூா் சுற்றுவட்டாரத்தினா் தேவைக்கு மட்டுமே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.