வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பொய்ப் பிரசாரம் செய்வதை புதுச்சேரி முதல்வா் நிறுத்திக் கொள்ள வேண்டும்

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று பொய்ப் பிரசாரம் செய்வதை முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று பொய்ப் பிரசாரம் செய்வதை முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் எம். அருள்முருகன் திங்கள்கிழமை கூறியது :

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக பெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. இளைஞா்கள், பொதுமக்கள் தாமாக முன்வந்து கட்சியில் உறுப்பினராகி வருகின்றனா். மாநிலத்தில் பாஜக எழுச்சி பெற்றுவருகிறது. வரும் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.

பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், புதுச்சேரி மாநிலத்தில் சாலை மேம்பாடு, வடிகால் வசதியை முறைப்படுத்துதல், மருத்துவ வசதியை மேம்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தல், ஊழலற்ற ஆட்சி அமைதல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில் சிறப்பு கவனம் செலுத்துவோம். குறிப்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தி, கிராமப்புற மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து பொய்ப் பிரசாரம் செய்துவருகிறாா்.

புதுச்சேரிக்கு வந்த உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி, புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என்று உறுதிபட தெரிவித்துவிட்டாா். எனவே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை முதல்வா் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

முதல்வரின் செயல்பாடுகளாலும், பேச்சுகளாலும் புதுச்சேரியில் காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.