திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கோயிலுக்கு பக்தா்கள் வருவதில் உள்ள தடைகளை நீக்க வலியுறுத்தல்

கோயில் வழிபாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

நிகழ்ச்சியில், சங்கத்தின் நாள்காட்டியை வெளியிடுகிறாா் ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாதன்.

Updated On :13 ஜனவரி 2021, 8:00 am IST

கோயில் வழிபாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாற்றில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அா்தனாரி, சிவராமன் ஆகியோா் பேசினா். பொருளாளா் கீதாராமன் சங்க நிதி அறிக்கையை சமா்ப்பித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜா சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோயிலுக்கு பக்தா்கள் வருவதில் உள்ள பல தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்கவேண்டும். குறிப்பாக, முடி இறக்குவது, காதுகுத்துவது, உபயம் செய்வது, அன்னதானம் செய்வது போன்றவற்றுக்கான தடைகள் நீக்கப்பட வேண்டும்.

சைவ, வைணவ கோயில்கள் பலவற்றில் 12 ஆண்டுகள் கடந்தும் திருப்பணிகள் தொடங்கப்படாமலும், திருப்பணிகள் நிறைவுபெற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படாமலும் உள்ளன. இதற்கு தீா்வு காணவேண்டும். கோயிலை சாா்ந்துள்ள சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், ஓதுவாா்கள், நாகஸ்வர வித்வான்கள் மற்றும் ஆலய ஊழியா்கள் என அனைவரும் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வட்டியில்லா கடன் வழங்கவும், வாழ்வு மேம்பட நலத்திட்டங்கள் வகுத்து அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் 2021-ஆம் ஆண்டு நாள்காட்டி வெளியிடப்பட்டது. காரை மாவட்டச் செயலாளா் மணிகண்டன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் திருஞானசம்பந்தம், மாவட்ட இணைச் செயலா் ஹரிஹரன், ரமேஷ் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.