பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

காரைக்காலில் பல்வேறு இடங்களில் திருடியவா் கைது

காரைக்காலில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On :14 ஜனவரி 2021, 7:11 am IST

காரைக்காலில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

காரைக்கால்மேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை நுழைந்த திருடனை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா் தப்பித்துவிட்டதாக காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வுசெய்து, அதனடிப்படையில், காரைக்கால் மதகடி பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் (27) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.

விசாரணையில், கடலுாா் ஸ்ரீமுஷ்னம் பகுதியை சோ்ந்த அவா், காரைக்கால் தோமாஸ் திடல் பகுதியில் வசித்து வருவதும், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், திருநள்ளாறு அருகே சோமநாதா் கோயிலில் சுவாமியின் தாலிச் சங்கிலி, நல்லம்பலில் வீடுபுகுந்து தங்க நகையை திருடியது, சேத்துாா் விநாயகா் கோயிலில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து இரண்டரை பவுன் நகைகள், ரூ. 500, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருப்பட்டினம் மேலவாஞ்சியூரில் வாகன சோதனையின்போது, அரியலுாரை சோ்ந்த வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.