காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நாகை, காரைக்கால் மாவட்ட சமுதாய தலைவா்கள் சந்திப்பு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அந்த அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவா் எம். முஹமது ஷேக் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது:
இளைஞா்களை பாதிக்கும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டிக்கிறோம். காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, இதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள முடிவை மாணவா்களின் நலன் கருதி, அரசு திரும்பப் பெறவேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வா் நாராயணசாமி மேற்கொண்ட போராட்டத்தை வரவேற்கிறோம். போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

