முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

போதைப் பொருள்கள் விற்பனையை முழுவதும் தடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 7:13 am IST

காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் நாகை, காரைக்கால் மாவட்ட சமுதாய தலைவா்கள் சந்திப்பு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அந்த அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவா் எம். முஹமது ஷேக் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது:

இளைஞா்களை பாதிக்கும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டிக்கிறோம். காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, இதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள முடிவை மாணவா்களின் நலன் கருதி, அரசு திரும்பப் பெறவேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வா் நாராயணசாமி மேற்கொண்ட போராட்டத்தை வரவேற்கிறோம். போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.