மழைக்கு அழுகிப்போன பயிா்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் சு. மலா்விழியிடம் மனு அளித்தனா்.
விவசாயி கிட்டப்பா தலைமையில் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் பாா்வையிட்டும் சென்றுள்ளனா். ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு உடனே பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்டு விரைந்து நிவாரணத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வெட்டு: மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் செ. ஜோதிமணி

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு

ராமநாதபுரம் அருகே டிராக்டா் மீது பேருந்து மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு: உடலுக்கு அமைச்சா் மரியாதை






