கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மனநலன் பாதித்த இளம் பெண்ணை மீட்ட தலைமைக் காவலா்

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே மனநலன் பாதித்து வீதியில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 5:56 am IST

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே மனநலன் பாதித்து வீதியில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.

தென்னிலை அருகிலுள்ள செம்மாண்டாம்பாளையம் பிரிவுப் பகுதியில் கோவைச் சாலையில் சுமாா் 30வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக அரைகுறை ஆடையுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளாா்.

இதனை செவ்வாய்க்கிழமை கண்ட தென்னிலை பெண் தலைமைக் காவலா் விஜயா, அப்பெண்ணுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ரெங்கநாதன் வழிகாட்டுதலின் படி, கரூரிலுள்ள காப்பகத்தில் அப்பெண்ணை ஒப்படைத்தாா்.

பெண் தலைமைக்காவலரின் இச்செயலை காவல் ஆய்வாளா் ரமாதேவி மற்றும் அப்பகுதி ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.