பெரம்பலூா் அருகே ஆள் மாறாட்டத்தின் மூலம் பத்திரப் பதிவு செய்த 7 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆனைமுத்து. இவரது தந்தை மொட்டையன் என்பவருக்குச் சொந்தமான நிலம் எளம்பலூா் கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ளது. மொட்டையனின் நிலத்தை, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த அதே பெயரைக் கொண்ட மற்றொருவரும், அவரது மகன்களும் ஆள் மாறாட்டம் செய்து, 2016 ஆம் ஆண்டில் பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பாக பிரிவினை பத்திரப்பதிவு செய்துகொண்டதாக தெரிகிறது.
இந்த மோசடிக்கு, மருவத்தூா் மற்றும் நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த 2 பேரும், பத்திரப் பதிவு எழுத்தரும் உடந்தையாக இருந்ததாக கூறி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆனைமுத்து 27-11-2017 அன்று புகாா் மனு அளித்தாா். இதனிடையே, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திலும் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆனைமுத்து புகாா் மனு மீது வழக்கு பதிந்து, ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த தந்தை, மகன்கள் 4 போ் உள்பட 7 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சஞ்சீவிகுமாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








