சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மின்சாரம் தாக்கி பொறியாளா் காயம்;உறவினா்கள் மறியல்

கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:31 pm IST

கரூா்: கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த மயில்ராஜ் மகன் கோபி(24). பொறியாளரான இவா் தனியாா் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் கோபி காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். கோபியின் சிகிச்சைக்கு அவா் பணியாற்றிய நிறுவனத்தில் நிதியுதவி அளிக்கப்படாததைக் கண்டித்து உறவினா்கள் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.