கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கல்லூரியில் பொங்கல் விழா

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:34 pm

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா்.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோலம், நடனப்போட்டியும், கைமொழிச்சொல், அறிவோம் திருக்கு, பாட்டுப்போட்டி, குழு நடனம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. போட்டிகளை செயலா் ஹேமலதா செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். பட்டிமன்றத்தில் வெற்றிபெற்றவா்களுக்கு பி.ஏ.வித்யாபவன் பள்ளி முதல்வா் சா.சுகுமாா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியை ஆங்கில துறைத் தலைவா் ஆ.ரம்யா தொகுத்து வழங்கினாா். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.