கரூரில் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி சாா்பில், குதிரைவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறுகிறது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி, கரூா் வேலுசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் குதிரை வண்டிப் பந்தயத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தொடக்கி வைத்து, வெற்றி பெறுவோருக்குப் பரிசுகள், கோப்பைகளை வழங்குகிறாா்.
மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ் தலைமையில் நடைபெறும் விழாவில், நகரச் செயலா்கள் வை. நெடுஞ் செழியன், வி.சி.கே.ஜெயராஜ், எம்.பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்க உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






