அந்தக் குரு தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது குரு சீடர்களிடம், 'பயம்தான் பேராசைக்குக் காரணம்!' என்று போதித்தார்.
சீடர்களுக்கு குரு சொன்னது விளங்கவில்லை.
பயம் என்பது வேறு, பேராசை என்பது வேறு. பயத்திற்கும் பேராசைக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? என்று குழம்பினார்கள்.
தங்கள் சந்தேகத்தை குருவிடமே கேட்கவும் செய்தார்கள். குரு புன்னகைத்தபடி, 'இக்கேள்விக்கான பதிலை உங்களுக்கு நாளை சொல்கிறேன்!' என்று சொல்லிவிட்டார்.
இரவு உணவு நேரம்.
குருவும் சீடர்களும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஆசிரமத்தின் சமையற்காரர் அங்கு வந்தார்.
அவர் குருவிடம், 'சுவாமி! நம் கைவசம் இருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. நாளை காலை யாருக்கும் உணவு இருக்காது போலிருக்கிறது. வெளியூர் சென்று பொருள்கள் வாங்கி வர எப்படியும் நண்பகல் ஆகிவிடும்'' என்று சொன்னார்.
சமையற்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு ஜாடையால் பதில் சொல்லி அனுப்பினார். எல்லோரும் அமைதியாக உணவு உண்டு முடித்தனர். சீடர்கள் அனைவரும் உண்டு முடித்ததும் குரு அவர்களிடம் 'நீங்கள் வழக்கமாக உண்பதைவிட இப்போது சற்று அதிகம் உணவு உட்கொண்டீர்களா?' என்று கேட்டார்.
சீடர்களால் குருவிடம் உண்மையை மறைக்க முடியாதே! அனைவரும் 'ஆமாம்!' என்றனர்.
குரு கேட்டார் 'நாளை இரவுதான் இனி அடுத்த வேளை உணவு உண்ண முடியும் என்று தெரிந்தவுடன் நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாக உணவு உட்கொண்டீர்கள். நாளை இரவுவரை பசியைத் தாங்க முடியுமா, முடியாதா என்ற பயம்தான் இப்போது நீங்கள் அதிகம் உண்டதன் காரணம். ஆக பயம்தான் பேராசைக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
சீடர்களும் குருவின் விளக்கத்தை ஒப்புக்கொண்டனர்.
Summary
A moral story that children should know.
தொடர்புடையது
நீதிக் கதைகள்! விதூஷகனின் நுண்ணறிவு!
நீதிக் கதைகள்! ஒரு விடைக்கு ஒரு பழம்!

நீதிக் கதைகள்! அன்பு என்ற செல்வம்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |




