எங்கள் ஊரில் ஆறு ஒன்று
அழகாய் நீண்டு போகுது! -நுரை
பொங்கி ஓடும் அந்த ஆறே
பொன்னி என்னும் காவிரி!
-
பொன்னி நதியின் பெருமை பற்றி
பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை
எண்ணி எண்ணி எனது மனமும்
உவகை தினமும் கொள்ளுதே!
-
பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்
பசுமை வயல்கள் பலவே!- அவை
பொன்னி நீரால் செழுமை நிறைந்து
பலபல தானியம் தந்திடுலாமே!
-
ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்
அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்
பெற்றோர் கூடப் போகும் போது
பார்த்து மகிழ்ந்து போவேனே!
-
புனித நாளில் பலரும் இங்கே
படைகள் போல வருகிறார்!- இந்த
இனிய நதியில் இறங்கிக் குளித்தே
இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!
-
நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்
நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்
நச்சு கலந்த நீரை விடுதல்
நன்றோ நீங்கள் சொல்வீரே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரீல்ஸ் ஸ்டார்... ரசிகர்களிடம் வைரலாகும் நடிகை விஜயலட்சுமி!

தனியாா் பேருந்துகள் போட்டாப் போட்டி விபத்தில் இருந்து தப்பியது அரசுப் பேருந்து
அதிரடியாக உயர்ந்த அரிசி விலை! கிலோவுக்கு ரூ. 15 அதிகம்! - விநியோகப் பற்றாக்குறை காரணமா?

கெலவரப்பள்ளி அணை பகுதியில் காற்றில் பறக்கும் ரசாயன நுரைகள்: மக்கள் அச்சம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


