11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

நதிக்கு நமது நன்றி

எங்கள் ஊரில் ஆறு ஒன்று அழகாய் நீண்டு போகுது! -நுரை

News image
Updated On :52 நிமிடங்கள் முன்பு

எங்கள் ஊரில் ஆறு ஒன்று

அழகாய் நீண்டு போகுது! -நுரை

பொங்கி ஓடும் அந்த ஆறே

பொன்னி என்னும் காவிரி!

-

பொன்னி நதியின் பெருமை பற்றி

பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை

எண்ணி எண்ணி எனது மனமும்

உவகை தினமும் கொள்ளுதே!

-

பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்

பசுமை வயல்கள் பலவே!- அவை

பொன்னி நீரால் செழுமை நிறைந்து

பலபல தானியம் தந்திடுலாமே!

-

ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்

அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்

பெற்றோர் கூடப் போகும் போது

பார்த்து மகிழ்ந்து போவேனே!

-

புனித நாளில் பலரும் இங்கே

படைகள் போல வருகிறார்!- இந்த

இனிய நதியில் இறங்கிக் குளித்தே

இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!

-

நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்

நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்

நச்சு கலந்த நீரை விடுதல்

நன்றோ நீங்கள் சொல்வீரே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.