ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

நதிக்கு நமது நன்றி

எங்கள் ஊரில் ஆறு ஒன்று அழகாய் நீண்டு போகுது! -நுரை

News image
Updated On :17 மே 2026, 12:00 am IST

எங்கள் ஊரில் ஆறு ஒன்று

அழகாய் நீண்டு போகுது! -நுரை

பொங்கி ஓடும் அந்த ஆறே

பொன்னி என்னும் காவிரி!

-

பொன்னி நதியின் பெருமை பற்றி

பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை

எண்ணி எண்ணி எனது மனமும்

உவகை தினமும் கொள்ளுதே!

-

பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்

பசுமை வயல்கள் பலவே!- அவை

பொன்னி நீரால் செழுமை நிறைந்து

பலபல தானியம் தந்திடுலாமே!

-

ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்

அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்

பெற்றோர் கூடப் போகும் போது

பார்த்து மகிழ்ந்து போவேனே!

-

புனித நாளில் பலரும் இங்கே

படைகள் போல வருகிறார்!- இந்த

இனிய நதியில் இறங்கிக் குளித்தே

இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!

-

நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்

நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்

நச்சு கலந்த நீரை விடுதல்

நன்றோ நீங்கள் சொல்வீரே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.