எங்கள் ஊரில் ஆறு ஒன்று
அழகாய் நீண்டு போகுது! -நுரை
பொங்கி ஓடும் அந்த ஆறே
பொன்னி என்னும் காவிரி!
-
பொன்னி நதியின் பெருமை பற்றி
பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை
எண்ணி எண்ணி எனது மனமும்
உவகை தினமும் கொள்ளுதே!
-
பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்
பசுமை வயல்கள் பலவே!- அவை
பொன்னி நீரால் செழுமை நிறைந்து
பலபல தானியம் தந்திடுலாமே!
-
ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்
அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்
பெற்றோர் கூடப் போகும் போது
பார்த்து மகிழ்ந்து போவேனே!
-
புனித நாளில் பலரும் இங்கே
படைகள் போல வருகிறார்!- இந்த
இனிய நதியில் இறங்கிக் குளித்தே
இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!
-
நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்
நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்
நச்சு கலந்த நீரை விடுதல்
நன்றோ நீங்கள் சொல்வீரே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காவிரி ஆற்றங்கரையில் ஆண் சடலம் மீட்பு

திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்

துரதிர்ஷ்டவசமான ஒன்று! அதிமுக MLA-க்களின் ராஜிநாமா குறித்து MLA சௌமியா அன்புமணி!

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


