எங்கள் ஊரில் ஆறு ஒன்று
அழகாய் நீண்டு போகுது! -நுரை
பொங்கி ஓடும் அந்த ஆறே
பொன்னி என்னும் காவிரி!
-
பொன்னி நதியின் பெருமை பற்றி
பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை
எண்ணி எண்ணி எனது மனமும்
உவகை தினமும் கொள்ளுதே!
-
பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்
பசுமை வயல்கள் பலவே!- அவை
பொன்னி நீரால் செழுமை நிறைந்து
பலபல தானியம் தந்திடுலாமே!
-
ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்
அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்
பெற்றோர் கூடப் போகும் போது
பார்த்து மகிழ்ந்து போவேனே!
-
புனித நாளில் பலரும் இங்கே
படைகள் போல வருகிறார்!- இந்த
இனிய நதியில் இறங்கிக் குளித்தே
இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!
-
நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்
நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்
நச்சு கலந்த நீரை விடுதல்
நன்றோ நீங்கள் சொல்வீரே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாலி பாக்கியம் தரும் தலம்!

ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்கு
உற்சாகம் தரும் இசை!

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
