காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நதிக்கு நமது நன்றி

எங்கள் ஊரில் ஆறு ஒன்று அழகாய் நீண்டு போகுது! -நுரை

Published On :

எங்கள் ஊரில் ஆறு ஒன்று

அழகாய் நீண்டு போகுது! -நுரை

பொங்கி ஓடும் அந்த ஆறே

பொன்னி என்னும் காவிரி!

-

பொன்னி நதியின் பெருமை பற்றி

பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை

எண்ணி எண்ணி எனது மனமும்

உவகை தினமும் கொள்ளுதே!

-

பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்

பசுமை வயல்கள் பலவே!- அவை

பொன்னி நீரால் செழுமை நிறைந்து

பலபல தானியம் தந்திடுலாமே!

-

ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்

அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்

பெற்றோர் கூடப் போகும் போது

பார்த்து மகிழ்ந்து போவேனே!

-

புனித நாளில் பலரும் இங்கே

படைகள் போல வருகிறார்!- இந்த

இனிய நதியில் இறங்கிக் குளித்தே

இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!

-

நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்

நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்

நச்சு கலந்த நீரை விடுதல்

நன்றோ நீங்கள் சொல்வீரே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.