திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

 பாமகவினர் 80 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை

Updated On :11 மே 2013, 7:01 am

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 237 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில், மேலும், 80 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதியும், 73 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 22ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் எனக் கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அன்புராஜ் ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.