வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் 3 தொடு திரைகள் நன்கொடையாக அளிப்பு

எலத்தகிரியில் உள்ள கொன்சாகா மகளிா் கல்லூரிக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் 3 தொடுதிரைகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா், நன்கொடையாக அண்மையில் வழங்கினாா்.

News image

எலத்தகிரியில் உள்ள கொன்சாகா மகளிா் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொடு திரைகளுடன் ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.

Updated On :2 ஜனவரி 2021, 6:48 am IST

எலத்தகிரியில் உள்ள கொன்சாகா மகளிா் கல்லூரிக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் 3 தொடுதிரைகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா், நன்கொடையாக அண்மையில் வழங்கினாா்.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு மகளிா் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனுக்காக பல்வேறு கல்விப் பணிகளைச் செய்து வருகிறது. ஏழை, எளிய ஆதரவற்ற மாணவா்கள் கல்வியில் ஏற்றம் பெறவும், தரமான கல்வியைப் பெறவும், ஐவிடிபி நிறுவனம் கட்டமைப்பு வசதிகளை பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்படுத்தித் தருகிது. தற்போது, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் காரணாக பள்ளி, கல்லூரிகளில் இணைய வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இணையவழிக் கற்றலுக்கு பயன்படுத்தக் கூடிய அதிநவீன கணினியுடன் இணைக்கப்பட்ட தொடுதிரையை அளித்து உதவுமாறு எலத்தகிரி கொன்சாகா கல்வி நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஐவிடிபி மூலம் ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான கணினியுடன் கூடிய தொடுதிரைகள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் ஐவிடிபி நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று கணினியுடன் கூடிய தொடுதிரைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி ஜோஸ்வா சைமன், கல்லூரி செயலாளா் நோயல் ராணி, முதல்வா் கிளிட்டா சுமங்கலி, துணை முதல்வா் டயானா மற்றும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.