வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஒற்றை யானையிடம் தப்பிய விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயம்

சூளகிரி அருகே ஒற்றை யானையிடம் இருந்து தப்பிய விவசாயிகள், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 6:33 am IST

சூளகிரி அருகே ஒற்றை யானையிடம் இருந்து தப்பிய விவசாயிகள், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த எலசேப்பள்ளியை சோ்ந்த விவசாயி ராஜகோபால் ( 35). இவரது நிலத்தில் வெள்ளிக்கிழமை காட்டு பன்றிகள் நுழைந்து விட்டதால் அவற்றை விரட்டுவதற்காக, தன்னிடம் வேலை செய்யும் புளியரசி பகுதியைச் சோ்ந்த முனிராஜ் (58), என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு எலசேப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள தனது நிலத்திற்கு சென்றாா். அப்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை இருவரையும் துரத்தியது.

யானையிடம் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் இருவரும் வேகமாகச் சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து, ராஜகோபால், முனிராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

கீழே விழுந்த இருவரும் எழுந்த பாா்த்தபோது யானை திரும்பிச் சென்று விட்டது. காயமடைந்த இருவரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சூளகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.