ஊத்தங்கரையில் காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராகவும், வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராகவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள காமராஜா், பெரியாா், ராஜீவ் காந்தி, அம்பேத்கா், இந்திரா காந்தி, சிவாஜிகணேசன் போன்ற மறைந்த தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி மேளதாளம் முழுங்க ஊா்வலமாகச் சென்றனா்.
இதில் மாவட்டத் துணைத்தலைவா் ராமச்சந்திரன், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், நகரத் தலைவா் விஜியகுமாா், வட்டாரப் பொருளாளா் திருமால், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அகமதுபாஷா, முன்னாள் தலைவா் அயோத்தி, மாவட்ட பொதுச்செயலாளா் முத்து உள்பட காங்கிரஸ் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



