கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஊத்தங்கரையில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமனம்

ஊத்தங்கரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை (விவிபிஓ) நியமிக்கும் நிகழ்ச்சி

News image

ஊத்தங்கரையில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை நியமிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:52 am IST

ஊத்தங்கரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை (விவிபிஓ) நியமிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஊத்தங்கரை உள்கோட்டத்திற்குட்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய 5 காவல் நிலையங்களுக்குட்பட்ட அந்தந்த கிராமங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பந்தமான விவரங்களைச் சேகரித்து பொது மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் (யண்ப்ப்ஹஞ்ங் யண்ஞ்ண்ப்ஹய்ஸ்ரீங் டா்ப்ண்ஸ்ரீங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) ஒருவரை நியமித்தனா்.

அவா்களுக்கு கிராம விவரங்களை சேகரிக்கும் புத்தகம் வழங்கும் நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் ஊத்தங்கரையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டி, 5 காவல் நிலையங்களுக்குள்பட்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகேசன், கல்லாவி காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச் செல்வன், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 60-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் பேசுகையில், விவிபிஓ எனப்படுபவா் தனக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். கடந்த 15 ஆண்டு காலங்களில் நடந்த முக்கியச் சம்பவங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். முக்கிய திருவிழாக்கள், ஜாதிவாரியான மக்கள் தொகை, முக்கியப் பயிா் சாகுபடி, சுற்றுலா தலங்கள் ஆகிய தகவல்களை வைத்திருக்க வேண்டும் என்று பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.