ஒசூரில் செயல்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்த மகா சபாவினா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புகாா் மனுவை புதன்கிழமை அளித்தனா். இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் கல்கி ராஜசேகா், தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு அதன் தொழிலாளிகளை அழைத்து செல்ல பிற மாநிலத்தைச் சோ்ந்த 40 பேருந்துகள் உரிய ஆவணங்களின்றி, இயக்கப்படுகின்றன. பிற மாநில பேருந்துகளை இயக்க, தாற்காலிக அனுமதி பெற்றிருக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்டப்படி, இந்த பேருந்துகளை இயக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பிற மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய மேண்டிய முறையான வரியை செலுத்தாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த பேருந்துகள் மீதும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்? கருடசேவை முதல் தீர்த்தவாரி வரை!

வர்த்தகப் பேச்சு! ஜூன் மாதம் இந்தியா வரும் அமெரிக்க குழு!

யார் இந்த பத்மா ஜெய்ஸ்வால்? ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட காரணம்?

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
விடியோக்கள்

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
