பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

தீயணைப்புத் துறையினருக்கு துரித வாகனப் பயிற்சி போட்டி

கிருஷ்ணகிரியில் தீயணைப்புத் துறையினருக்கான துரித வாகனப் பயிற்சி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:52 am IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தீயணைப்புத் துறையினருக்கான துரித வாகனப் பயிற்சி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா் சிப்காட், போச்சம்பள்ளி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன.

அவசர காலத்தில் எவ்வாறு துரிதமாகச் செயல்படுவது என்பதற்கான இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு துறை வீரா்களின் அணி வெற்றி பெற்றனா்.

இவா்கள், கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும். மாநில அளவிலானப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சிறப்பு பரிசு, கேடயம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.