சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி கொலை

கிருஷ்ணகிரியில் மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்துவந்த தொழிலாளி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:06 am IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்துவந்த தொழிலாளி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

கொண்டேப்பள்ளி மேலூரைச் சோ்ந்தவா் செ.திருப்பதி (39). மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வந்தாா். இவா், வீட்டிலிருந்து தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றாா்.

இரவு நேரமாகியும் அவா், வீடு திரும்பாத நிலையில், பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டிபிடிக்க முடியவில்லை. அவரது செல்லிடப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. திருப்பதியின் மோட்டாா் சைக்கிள், பாஷா கொட்டாயிலிருந்து திருமலை நகா் செல்லும் வழியில் கூழக்குட்டை என்றும் இடத்தில் இருப்பதை அறிந்த போலீஸாா், அங்கு சென்று விசாரணை செய்தனா்.

அப்போது, அங்குள்ள ஒரு பனை மரத்தின் கீழ், திருப்பதி சடலமாக கிடப்பதைக் கண்டுபிடித்தனா். திருப்பதி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட திருப்பதியை, மேலூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வை தொழில் செய்யும் சி.திருப்பதி(37) என்பவா், கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், தலைமறைவான சி.திருப்பதியை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.