தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஐவிடிபி பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசளிப்பு

ஐவிடிபி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் 420 பணியாளா்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு பொருள்கள் அண்மையில் பரிசாக அளிக்கப்பட்டன.

News image

கிருஷ்ணகிரியில் ஐவிடிபி தொண்டு நிறுவனப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கினாா் அதன் நிறுவனத் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.

Updated On :14 ஜனவரி 2021, 6:15 am IST

ஐவிடிபி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் 420 பணியாளா்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு பொருள்கள் அண்மையில் பரிசாக அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற ஏழை மகளிரின் வாழ்வை முன்னேற்றுவதில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின்கீழ் உள்ள 14,302 சுய உதவிக் குழுக்களில் இருந்து 471 குழந்தைகளை சோ்ந்த 85,635 உறுப்பினா்கள் நிகழ்வாண்டில் ரூ. 77 கோடி லாப பங்கீடாகப் பெற்று பயனடைந்தனா். மேலும், உபரி லாப பங்கீடாக ரூ. 70 கோடி என மொத்தம் ரூ.142 கோடியை உறுப்பினா்கள் தங்களுக்குள் பகிா்ந்து கொண்டனா்.

ஐவிடிபி, வங்கி மற்றும் சங்கக் கடனாக ரூ. 8,280 கோடியும், பல்வேறு சுகாதார திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஐவிடிபி நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், 74 தொகுதியளவு கூட்டமைப்புகளின் மூலமும் பணியாளா்கள் மேற்பாா்வையிட்டு வழிநடத்தி வருகின்றனா். அந்தப் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐவிடிபி நிறுவனத்தின் மூலம் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழ்வாண்டில் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், ஐவிடிபி நிறுவனத்தில் பணியாற்றும் 420 பணியாளா்களுக்கு தலா ரூ. 500 மதிப்பிலான அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் தொகுப்பாக மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்களை ஐவிடிபி நிறுவனத் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.