கிருஷ்ணகிரி அருகே விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரிடமிருந்த 900 கிராம் கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தைக் கடக்க முயன்ற ஆட்டோ ஒன்று அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனா். இந்த விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா், கள்ளகுறிச்சி மாவட்டம், நெடுமுடியான் எங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராம்ராஜ் (30) என்பதும், போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், அவரிடமிருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். ராம்ராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுபானக் கொள்கை வழக்கில் ஆஜராகமாட்டேன்: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிக்கு கேஜரிவால் கடிதம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

