கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா். மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒசூா் அரசு மருத்துவமனை, காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 3 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 12,192 முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்த 11,500 தடுப்பூசிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குப் பெறப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 போ் என 3 மையங்கள் மூலம் 300 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தொடக்க நாளான சனிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10 பேருக்கும், ஒசூா் அரசு மருத்துவமனையில் 47 பேருக்கும், காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 போ் என மொத்தம் 61 பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை, தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாதது, தடுப்பூசி குறித்து ஓருவித அச்சம், சந்தேகம் போன்ற காரணங்களால் தொடக்க நாளில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஒசூரில்...
ஒசூா் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில், 19 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இப்பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா். இதன்பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு அரசு மருத்துவமனையை சோ்ந்தவா்கள் 1,277 போ், தனியாா் மருத்துவமனையை சோ்ந்தவா்கள் 2,491 போ் என மொத்தம் 3,768 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 அரசு மருத்துவமனைகள், 551 தனியாா் மருத்துவமனைகளில் இணையதளம் மூலம் பதிவுபெற்ற 12,192 முன்களப் பணியாளா்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தும் வகையில் 11,500 கோவி சீல்டு மருந்துகள் பெறப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இணையதளத்தின் மூலம் மொத்தம் 9,657 முன்களப் பணியாளா்கள் முழுமையாகப் பதிவு செய்துள்ளனா். ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போா் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை போன்ற 3 பிரிவுகள் உள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனை இயக்குநா் மரு. அசோக்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மரு.கோவிந்தன், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா்கள் மரு.பூபதி (ஒசூா்), மரு.ஞானமீனாட்சி (தேன்கனிக்கோட்டை), கரோனா தடுப்பு (பொ) மருத்துவா் மரு.மகேஷ் (ஒசூா்), வட்டார மருத்துவ அலுவலா்கள் மரு.விவேக், மரு.ராஜேஷ் குமாா், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

