சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தொட்டூா் கிராமத்தில் குடிநீா் விநியோகம்:எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

தொட்டூா் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகத்தைத் தொடக்கி வைக்கும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

Updated On :16 ஜனவரி 2021, 8:27 pm

ஒசூா்: அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து துவக்கிவைத்தாா். உடன் தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றிய குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், பேரூா் செயலாளா் சீனிவாசன், அவைத் தலைவா்கள் கிரிஷ், நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபி, மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.