கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், புலாளா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). இவா் அப் பகுதியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஓா் அறையில் தூங்கச் சென்றாா்.
சனிக்கிழமை காலை அறையின் கதவைத் திறக்க முயன்ற போது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகு அறையிலிருந்து வெளியே வந்த செல்வராஜ், வீட்டின் மற்றொரு அறையில் தனது மகனின் திருமணத்துக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்த விசாரணையில் வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்தவா்கள் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


