

புதுதில்லி, ஜன.9: காமன்வெல்த் போட்டிகளுக்கான பொருட்களை சந்தை மதிப்புகளைவிட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிப்பதை மத்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரி கண்டுபிடித்துள்ளதாக நம்பப்படுகிறது.
சந்தை மதிப்புகளைவிட அதிகவிலை கொடுத்து போட்டிகளுக்கான பொருட்கள் வாங்கப்பட்டிருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரி கடந்தமாதம் போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கு அனுப்பிய மெமோவில் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறின.
அக்டோபர் 3 முதல் 14-ம் தேதி வரை 2 வாரங்கள் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான பல்வேறு பணிகளை சிஏஜி ஆய்வுசெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.