அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புரட்சியில் ஈடுபட மாவோயிஸ்டுகள் திட்டம்: நேபாளப் பிரதமர்

காத்மாண்டு, ஜன.9- நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மாதவ் நேபாள் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமைதி நடவடிக்கைகளை கண்காணித்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காத்மாண்டு, ஜன.9- நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மாதவ் நேபாள் கூறியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமைதி நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ஐநா குழு நேபாளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. மேலும், நேபாளத்தில் அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான "யுசிபிஎன்-மாவோயிஸ்டுகள்" ஜனநாயகத்தை முடக்கும் வகையில் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவலை நேபாள அரசு செய்தி நிறுவனமான ராஷ்ட்ரீய சமாச்சார் சமிதி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.