டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னையில் ஏடிஎம் மையத்தை உடைத்து தீவைத்தவர் கைது

சென்னை, ஜன.9: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைத்து, தீவைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சென்னை, ஜன.9: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைத்து, தீவைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த ஏடிஎம் மெஷினை உடைத்துள்ளார். அம்மையத்தில் இருந்த ரசீதுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருந்தார்.

கனரா வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான தனிப்படையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.

ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த புகைப்பட பதிவுகளை பார்த்தபோது திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த வரதராஜன் இந்த குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்தது. அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த 2 தினங்களில் குற்றவாளியைக் கைதுசெய்த திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் தமிழ்ச்செல்வன், சட்டம், ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்டோரை சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டியதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.