47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

2 சிறுவர்கள் பலி: வேதாரண்யம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

வேதாரண்யம், செப்.2: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் மண் சரிவால் நீரில் மூழ்கி நேற்று இறந்தனர். இது மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதால், இதைத் தொடர்ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:11 am

சங்கர்

வேதாரண்யம், செப்.2: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் மண் சரிவால் நீரில் மூழ்கி நேற்று இறந்தனர். இது மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதால், இதைத் தொடர்ந்து மணல் எடுப்பதை முறைப்படுத்தக் கோரி இன்று காலை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், தாணிக்கோட்டகம், காலனித் தெருவைச் சேர்ந்த குமார் மகன் தமிழ்மணி(6). இதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செடில்ராஜ்(9). இவர்களிருவரும், அப்பகுதியில் உள்ள மணல் எடுத்ததால் உருவான குளத்தின் கரையில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குளக்கரையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ்மணி, சேகர் ஆகிய 2 பேரும் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு, 2 சிறுவர்களையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு, 2 சிறுவர்களும் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து வாய்மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் வேதாரண்யம் தாணிக்கோட்டகம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணல் எடுப்பதை முறைப்படுத்த வலியுறுத்தி மேற்கொண்ட இந்த சாலை மறியலால் அந்தப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.