இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

செளமித்ரா சென் குறித்த தீர்மானம்: மக்களவைத் தலைவர் ஆலோசனை

புதுதில்லி, செப்.5: நீதிபதி செளமித்ர சென்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மக்களவைத் தலைவர் ம

Updated On :20 செப்டம்பர் 2012, 5:44 am IST

புதுதில்லி, செப்.5: நீதிபதி செளமித்ர சென்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் குறிப்பிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிபதி செளமித்ர சென்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் நீதிபதி பதவியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டார். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவரும் ஏற்றுக் கொண்டநிலையில் மக்களவையிலும் அதுபோன்ற தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமா என்பது தொடர்பாக அரசுப் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மீரா குமார் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே சென் ஏற்கனவே பதவி விலகிவிட்டதால் அவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் ஒருவர் சூசகமாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.