ஈரோடு, ஆக.12: இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வுகள் எழுதியவர்கள் தேர்வு எழுதி முடித்தபிறகு பஸ்களில் திரும்பிக் கொண்டிருதார்கள். அப்போது, ஒரு பெண் வைத்திருந்த கேள்வித் தாள் ஜெராக்ஸ் பிரதி, காலை எழுதிய டி.என்.பி.எஸ்.சி வினாத்தாளின் பிரதியாக இருந்ததை அருகில் அமர்ந்திருந்த ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளார். இதை அடுத்து, இந்தக் கேள்வித் தாள் எப்படி வந்தது? என்று விசாரித்தனர். இதை அடுத்து வினாத்தாள் முன்பே வெளியாகிவிட்டதோ என்ற பரபரப்பு ஈரோட்டில் எழுந்துள்ளது. இது குறித்து தேர்வு எழுதிய சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.